தேனி மாவட்டத்தில் உள்ள அப்பிபட்டியைச் சேர்ந்த பகவதி ராஜ் என்பவர் சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு பகவதி ராஜ் தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரியில் நான் கேரள மாநிலத்தில் எஸ்டேட் வாங்க ஆசைப்பட்டேன். ஆனால் என்னிடம் போதிய பணம் இல்லை. இதனால் வங்கியில் கடன் பெற முடிவு செய்து பழனிசெட்டிபட்டி பூதிபுரம் சாலையில் வசிக்கும் வழக்கறிஞரான சித்ரா என்பவரை அணுகினேன்.

அவர் வங்கியில் கடன் வாங்கி கொடுக்கும் ஆலோசராக இருப்பதாக கூறினார். கடன் பெறுவதற்கு பல்வேறு தவணைகளாக நான் சித்ராவின் கணவர் மோகனிடம் 24 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்தேன். இதே போல சித்ராவும் அவரது கணவரும் இணைந்து 7 பேரிடமிருந்து சுமார் 1 கோடியே 16 1/4 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சித்ராவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.