
சென்னையில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு மற்றும் அலுவலகங்கள், விழுப்புரத்தில் அவருக்கு சம்பந்தமான இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். பொன்முடி வீட்டில் முன்பாக திமுக தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு உள்ளனர். இந்நிலையில் வெளியில் திரண்டு இருந்த திமுக தொண்டர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் பொன்முடி வீட்டிற்குள் சோதனைக்காக சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் பைகளுடன் சென்றதால் அந்த பையை திறந்து காட்டுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.