கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளப்புறம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கனிம வளங்கள் ஏற்றி வந்த டாரஸ் லாரியை போலீசார் நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர். ஆனால் லாரி டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டி சென்றுள்ளார். இதனால் போலீஸ் ஏட்டு சஜிகுமார் தனது வாகனத்தில் லாரியை துரத்தி சென்று செங்கவிளை நாற்கரை சாலை தொடக்கத்தில் வைத்து மடக்கி பிடித்தார். இதனையடுத்து போலீசார் சோதனை நடத்தியதில் அதிக அளவு கனிம வளங்களை ஏற்றி சென்றது தெரியவந்தது. இதனால் லாரிக்கு போலீசார் ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
அளவுக்கு அதிகமான பாரம்…. லாரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்…. போலீஸ் நடவடிக்கை…!!
Related Posts
“நீங்க படுங்க.. பட்டு திருந்துங்க!”.. ஸ்டாலின் தோத்ததை என்னால தாங்கிக்க முடியல!”.. நெஞ்சு உருகிக் கண்ணீர் விட்ட சத்யராஜ்..!!
“கடந்த சட்டமன்றத் தேர்தலில் யாரும் அசைத்துப் பார்க்க முடியாத அசுர பலத்துடன் இருந்த திமுக, ஒட்டுமொத்த தமிழகமுமே ஸ்தம்பிக்கும் வகையில் படுதோல்வியைச் சந்தித்தது. வெறும் 10 அல்லது 20 இடங்களை மட்டுமே பிடிக்கும் என அரசியல் கணிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் …
Read moreபசியால் அழுத 4 மாத பச்சிளம் குழந்தை…! “தாய்ப்பால் கொடுத்ததும் மூச்சே நின்னு போச்சு”… 2 வருஷத்துக்குப் பின் பிறந்த குழந்தையை பறிகொடுத்து விட்டு கதறும் தாய்…!!
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில், அரியங்காடு பகுதியில் நெஞ்சை உலுக்கும் சோகச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பார்கவி என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குக் கடந்த நான்கு…
Read more