கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளப்புறம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கனிம வளங்கள் ஏற்றி வந்த டாரஸ் லாரியை போலீசார் நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர். ஆனால் லாரி டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டி சென்றுள்ளார். இதனால் போலீஸ் ஏட்டு சஜிகுமார் தனது வாகனத்தில் லாரியை துரத்தி சென்று செங்கவிளை நாற்கரை சாலை தொடக்கத்தில் வைத்து மடக்கி பிடித்தார். இதனையடுத்து போலீசார் சோதனை நடத்தியதில் அதிக அளவு கனிம வளங்களை ஏற்றி சென்றது தெரியவந்தது. இதனால் லாரிக்கு போலீசார் ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
அளவுக்கு அதிகமான பாரம்…. லாரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்…. போலீஸ் நடவடிக்கை…!!
Related Posts
“வடிகால் அடைப்பு பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு!” நேரில் களமிறங்கிய எம்.எல்.ஏ. ரேவந்த சரண்.. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட அதிரடி உத்தரவு..!!”
மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அயப்பாக்கம் பகுதியில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் முறையாகச் செயல்படவில்லை என்று பொதுமக்களிடமிருந்து தொடர்ச்சியாக வந்த புகார்களைத் தொடர்ந்து, தொகுதி எம்.எல்.ஏ. ரேவந்த சரண் அப்பகுதிக்கு நேரில் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் நீண்டகாலமாகத் தொடரும் வடிகால்…
Read more“ஆபீஸ் ஏசியில உட்கார்ந்து ஆர்டர் போடுற ஆள் நான் இல்ல” போராட்டக் களத்திற்கே நேரில் வந்த தவெக அமைச்சர்…. வைரலாகும் வீடியோ….!!
சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்ற தமிழகப் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், பொதுமக்களின் அவசரத் கோரிக்கையை ஏற்று தனது பயணத்தின் பாதியிலேயே வாகனத்தை நிறுத்திவிட்டு நேரடியாகக் களத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்ட சம்பவம்…
Read more