
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் சமீபத்தில் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று தற்போது பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளார். அதேசமயம் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான சாகுந்தலம் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதற்கு முன்னதாக யசோதா மற்றும் சாகுந்தலம் பட பிரமோசனின் போது சமந்தா செண்டிமெண்டாக பேசியிருந்தார்.
இந்நிலையில் இது குறித்து விமர்சித்துள்ள தயாரிப்பாளர் சிட்டிபாபு, சமந்தாவின் கேரியர் முடிந்து விட்டது, கதாபாத்திரமும் படமும் நன்றாக இருந்தால் மட்டுமே மக்கள் ரசிப்பார்கள். இத்தகைய மலிவான பைத்தியக்காரத்தனமான செயல்கள் வேலை செய்யாது. ஒவ்வொரு முறையும் சென்டிமென்ட் கை கொடுக்காது என அவர் கூறியுள்ளார்.