கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்கவரப்பட்டு கிராமத்தில் தமிழ்வாணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் தமிழ்வாணன் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் கீழ்குப்பம் துணை மின் நிலையம் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் தமிழ்வாணனை வழிமறித்து இரும்பு கம்பியால் தாக்கி செல்போன் மற்றும் 800 ரூபாயை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் காயமடைந்த தமிழ்வாணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரும்பு கம்பியால் தாக்கிய மர்ம நபர்…. நிதி நிறுவன ஊழியர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“வர்ற 10-ம் தேதி கல்யாணம்” ஆன்லைன் வர்த்தகத்தில் இழந்த பணம்…. யூடியூப் பார்த்து செய்த விபரீதம்… சிறையில் கம்பி எண்ணும் B.E பட்டதாரி…!!
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் காமராஜபுரம் நேதாஜி தெருவில் வசிப்பவர் சீதாலட்சுமி. இவரிடம் இரண்டு பவுன் சங்கிலியும் ,கிழக்கு தாம்பரம் ஆஞ்சநேயர் தெருவில் நித்திய சுபா என்பவரிடம் ஐந்து பவுன் சங்கிலியையும் மோட்டார் சைக்கிள் வந்த வாலிபர் பறித்து சென்றுள்ளார். இது…
Read moreஅடக்கடவுளே…! இன்று பணி ஒய்வு…. நேற்று டீ குடிக்கும்போதே பிரிந்த இன்ஸ்பெக்டர் உயிர்…!!
நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தில் வசித்து வந்தவர் தனபால். இவர் நீலகிரி மாவட்ட குற்றப்பதிவேடு ஆவண காப்பக பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் ஊட்டியில் ஒரு கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது…
Read more