சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி பகுதியில் மைதிலி என்பவர் வசித்து வருகிறார். இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இரவு நேரம் மைதிலி கடைக்கு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் மைதிலியை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினார். இதனால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்த மைதிலியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், மைதிலியை கத்தியால் குத்தியது கிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து மது போதையில் இருந்த தங்கராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடை முன்பு நின்று கொண்டிருந்த பெண்…. கத்தியால் குத்திய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“கேப்டனாகவும் மாஸ்…. பேட்டிங்கிலும் மாஸ்” ஐசிசி தரவரிசையில் டாப் கியர் போட்ட சுப்மன் கில்…. குவியும் வாழ்த்துக்கள்….!!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் மற்றும் ஒருநாள் (ODI) போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சுப்மன் கில் அதிரடியான ஆதிக்கத்தைச் செலுத்திப் புதிய சாதனை படைத்துள்ளார். சமீபகாலமாக பேட்டிங் மற்றும் கேப்டன்சி…
Read more“மாற்றுத்திறனாளி பாட்டி…. கண் தெரியாத பேத்தி” 4 வருஷமா உதவும் போக்குவரத்து காவலர்…. குவியும் பாராட்டுகள்….!!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வறுமையின் பிடியில் சிக்கி, அன்றாட உணவிற்கே வழியின்றி தவித்து வந்த மாற்றுத்திறனாளி பாட்டி மற்றும் கண் பார்வையற்ற பேத்தியின் அவல நிலை ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. தங்களைக் காப்பாற்ற யாரும் இல்லாத சூழலில், மாற்றுத்திறனாளியான…
Read more