சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி பகுதியில் மைதிலி என்பவர் வசித்து வருகிறார். இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இரவு நேரம் மைதிலி கடைக்கு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் மைதிலியை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினார். இதனால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்த மைதிலியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், மைதிலியை கத்தியால் குத்தியது கிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து மது போதையில் இருந்த தங்கராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.