சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி பகுதியில் மைதிலி என்பவர் வசித்து வருகிறார். இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இரவு நேரம் மைதிலி கடைக்கு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் மைதிலியை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினார். இதனால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்த மைதிலியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், மைதிலியை கத்தியால் குத்தியது கிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து மது போதையில் இருந்த தங்கராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடை முன்பு நின்று கொண்டிருந்த பெண்…. கத்தியால் குத்திய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
கள்ளக்குறிச்சியில் அதிரடி! பேருந்து நிலையத்தில் களமிறங்கிய சிங்கப்பெண்கள்.. பொதுமக்களுக்குப் விழிப்புணர்வு..!!!
கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் வைத்து, தமிழ்நாடு காவல்துறையின் சிறப்புப் பிரிவான ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படையினர் பொதுமக்களுக்கு மிகக் காத்திரமான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அவர்களுக்குப் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தவும் உருவாக்கப்பட்ட இந்த ‘சிங்கப்பெண்’ திட்டம் குறித்து,…
Read more“2 பொண்டாட்டியும் எனக்கு வேணும்.. ஒன்னா கூட்டிட்டுப் போறேன்!”.. அடம் பிடித்த கில்லாடி கணவன்.. திண்டுக்கல் போலீஸ் ஸ்டேஷனில் அரங்கேறிய அதிரடி கூத்து..!!!
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே, இரண்டு மனைவிகளையும் தன்னுடன் சேர்த்து அனுப்பி வைக்குமாறு வாலிபர் ஒருவர் காவல் நிலையத்திலேயே அடம் பிடித்த விசித்திர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி சடையாண்டி (28) என்பவருக்கு, சுமதி…
Read more