விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் 17 வயது சிறுவன் வசித்து வருகிறான். இந்த சிறுவன் மோட்டார் சைக்கிளில் ரயில்வே மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்ற போது எதிரே வந்த கார் சிறுவன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த சிறுவன் பேருந்தின் பின்புற சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தான். இதனை பார்த்த வாகன ஓட்டிகள் சிறுவனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.