விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் வெறிநாய் ஒன்று அடுத்தடுத்து 10 பேரை கடித்து குதறியது. இதனால் பெண் தூய்மை பணியாளர் உள்பட 10 பேர் வலியில் அலறி துடித்தனர். அவர்கள் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த பகுதியில் தெரு நாய்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே தெரு நாய்களின் தொந்தரவை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.