இந்தியாவில் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவிற்கு தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் 1,500 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் 2,151 பேருக்கு தொற்று உறுதியாகியது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 11,903 ஆக அதிகரித்தது.

கொரோனா பரவல் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது இந்தியாவில் ஒரே நாளில் 3016 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. நேற்று 2,151 ஆக இருந்த எண்ணிக்கை இன்று 3 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் 11,903-ல் இருந்து 13,509 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து மத்திய-மாநில அரசுகள் துரித நடவடிக்கையில் இறங்கியுள்ளது.