உத்திரபிரதேசம் மாநிலம் சம்பல் மாவட்டத்தில் சந்த்தவுசி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஒரு குளிர்பதன கிடங்கு இருக்கிறது. இந்த குளிர் பதன கிடங்கின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாககினர். இது குறித்த தகவலின் பேரில் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கூரை இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 11 பேரை மீட்டு  மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.