கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருக்கு அரசு விழா நடத்தப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி வெளியிட்ட இதுகுறித்து அறிவிப்பில் “வாஜ்பாய், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருக்கு அரசு விழா நடத்தப்படும்.

அதுமட்டுமின்றி இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார். அதேபோன்று பத்திரிக்கையாளர் ஓய்வூதியம் ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்படும் உள்ளிட்டவை முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.