கடந்த வருடம் தாம்பரம் ரயில் நிலையத்தில் காதலி ஸ்வேதாவை காதலன் குணசேகரன் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இதையடுத்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் குணசேகரன் கைது செய்யப்பட்டார். அதன்பின் குணசேகரன் ஜாமினில் வெளியே வந்தார். இதனிடையே விரைவில் குணசேகரன் நீதிமன்றத்தில் ஆஜராக இருந்த நிலையில், இன்று தன் வீட்டின் பின்புறத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் காதலியை கொன்றவர் திடீர் மரணம்…. பரபரப்பு சம்பவம்….!!!!
Related Posts
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும்….. அரசு அதிரடி….!!!
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் கிராமப்புறங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சொத்து, தொழில் வரி, குடிநீர் கட்டணம், மனைப் பிரிவு அனுமதி, கட்டட அனுமதி போன்ற மக்கள் நலன் சார்ந்த அரசு சேவைகளை…
Read moreவாகன ஓட்டிகளுக்கு ஆப்பு…! “இனி ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது” போக்குவரத்து காவல்துறை அதிரடி…!!
சூரிய ஒளி தகடுகளுடன் கூடிய ANPR கேமராக்கள் பொருத்தப்பட்ட பேரிக்காடுகளை சென்னை போக்குவரத்து காவல்துறை அமைத்துள்ளது. போக்குவரத்து விதிமுறைகளில் ஈடுபடுபவர்களை எளிதாக கண்டுபிடிப்பதற்கு சூரிய ஒளி தகடுகளுடன் கூடியANPR கேமராக்கள் பொருத்தப்பட்ட பேரிக்காடுகளை சென்னை போக்குவரத்து காவல்துறை அமைத்துள்ளது. இதன் மூலம்…
Read more