
ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையம்(CRIS) வாயிலாக AI தொழில்நுட்பம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. இது முன்பதிவு செய்யக்கூடிய பயணிகளின் நீண்ட கால காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வரும் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. டிக்கெட்டுகளுக்கான காத்திருப்பு பட்டியலை சரிசெய்யும் செயற்கை நுண்ணறிவு(AI) திட்டத்தின் சோதனையை இந்திய ரயில்வேயானது நிறைவு செய்திருக்கிறது. AI-இயங்கும் திட்டம் முதல் முறையாக 200-க்கும் அதிகமான ரயில்களில் காலியான பெர்த்களை ஒதுக்கி உள்ளது.
இதன் காரணமாக குறைவான மக்கள் மட்டும்தான் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டு இன்றி திரும்பவேண்டி இருந்தது. ரயில்களில் காத்திருப்போர் பட்டியலில் இருப்போரின் எண்ணிக்கையும் குறைந்து இருக்கிறது. இத்திட்டம் கடந்த 2 வருடங்களாக செயல்பாட்டில் இருக்கிறது. இதில் சென்ற சில வருடங்களாக AIக்கு டிக்கெட் முன்பதிவு தரவு கற்பிக்கப்பட்டது. இதன் வாயிலாக சரியான டிக்கெட் சேர்க்கைகளை உருவாக்குகிறது மற்றும் காத்திருப்பு பட்டியல்களை குறைக்கிறது.