கர்நாடகா தாண்டியா மாவட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது “கடந்த சில தினங்களாக பெங்களூரு மைசூரு எக்ஸ்பிரஸ்வே சாலை தொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் பரவியது. நம் நாட்டின் வளர்ச்சியை பார்த்து பெருமையுடன் இளைஞர்கள் செல்பி எடுத்து கொள்கின்றனர். வளர்ச்சி மற்றும் செழுமையை கருத்தில் கொண்டுதான் அனைத்து திட்டங்களும் திறந்து வைக்கப்படுகிறது.

ஏழை மக்களுக்கு தேவையான வளர்ச்சி பணிகளை உருவாக்குவதில், நான் முனைப்புடன் செயல்பட்டு வருகிறேன். ஆனால் காங்கிரஸ் எனக்கு கல்லறை தோண்டுவதில் தீவிரமாக இருக்கிறது. என்னை குழி தோண்டி புதைப்பதில் காங்கிரஸ் விறுவிறுப்புடன் இருக்கிறது. அதே சமயத்தில் இந்திய மக்களின் ஆசிர்வாதம் எனக்கு இருக்கிறது. ஏழை மக்களுக்குரிய பணத்தை காங்கிரஸ் அரசு கொள்ளையடித்தது” என்று அவர் பேசினார்.