அமெரிக்க நாட்டின் 46வது ஜனதிபதி ஜோ பைடன் ஆவார். அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு பதவியை ஏற்றுள்ளார். இவருடைய பதவி காலம் 2024 ஆம் ஆண்டு முடிவடைய உள்ளது. இவர் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதாக விரும்பம் தெரிவித்துள்ளார். ஆனால் இது குறித்து அவர் எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதற்கிடையில் அதிபர் ஜோ பைடனின் வயது மற்றும் உடல்நிலையை காரணம் காட்டி அவர் ஜனாதிபதியாகும் தகுதியுடன் உள்ளாரா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மார்பு பகுதியில் ஏற்பட்டிருந்த தோல் புற்றுநோய் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டுள்ளது. இது குறித்து ஜோ பைடனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் கெவின் கூறியதாவது “அதிபர் ஜோ பைடனுக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை காரணமாக புண் போன்று மார்பு பகுதியில் ஏற்பட்டிருந்த புற்றுநோய் திசுக்கள் அகற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த திசுக்களால் மார்பு பகுதியில் இருந்த காயமும் முற்றிலுமாக குணமடைந்துள்ளது. மேலும் இந்த திசுக்கள் ஆரம்ப கட்டத்தில் இருந்ததால் தொடர் சிகிச்சையால் முற்றிலும் அளிக்கப்பட்டுள்ளது. எனவே இனி அவருக்கு எந்தவித புற்றுநோய் சிகிச்சையும் தேவைப்படாது” என அவர் கூறியுள்ளார்.