தமிழ் சினிமா உலகில் இறுதி சுற்று திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் ரித்திகா சிங். இத்திரைப்படத்தை தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா என பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாராகி வரும் படத்தில் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்குகின்றார்.

இந்த திரைப்படம் குறித்து ரித்திகா சிங் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கூறியதாவது, இன் கார் படம் எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. மன உளைச்சலுக்கு உள்ளாகும் பெண் மனசு எந்த அளவுக்கு வேதனைக்கு உள்ளாவதையும் துன்பத்தின் எல்லை எது வரை செல்கின்றாள் என்பதை விளக்கமாக இந்த படம் பேசுகின்றது. இந்த திரைப்படத்தில் நடித்த பிறகு என்னால் அந்த தாக்கத்திலிருந்து மீள முடியவில்லை என தெரிவித்திருக்கின்றார்.

இதன்பின் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது கூறியதாவது, அண்மைக்காலமாக சோசியல் மீடியாவில் ஹீரோயின்களின் புகைப்படங்களை கட் செய்து எடிட் செய்தும் ஆபாசமாகவும் ட்ரோல் செய்கிறார்கள். நான் கூட இதுபோன்ற இன்னலுக்கு ஆளானேன். இது வேதனையாக இருக்கிறது. உங்களை போலவே எங்களுக்கும் குடும்பம் இருக்கின்றது என நினைத்து பாருங்கள். ரோல் செய்வதற்கு முன்பாக ஒன்றுக்கு இரண்டு முறை யோசிங்க என தெரிவித்திருக்கின்றார்.