நடிகர் உதயநிதி ஸ்டாலின் தற்போது கண்ணை நம்பாதே திரைப்படத்தில் நடித்து உள்ள நிலையில் இத்திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த திரைப்படத்தில் ஆத்மிகா, சதீஷ், பூமிகா, பிரசன்னா, ஸ்ரீகாந்த், வசுந்தரா என நட்சத்திரங்கள் பலரும் நடித்திருக்கின்றார்கள். அடுத்த மாதம் ரிலீஸ் ஆக உள்ள இந்த திரைப்படத்திற்கு சித்துகுமார் இசையமைத்திருக்கின்றார்.

இந்த நிலையில் திரைப்படம் குறித்து இயக்குனர் மாறன் தெரிவித்துள்ளதாவது, ஒரு பிரச்சனையில் சிக்கும் உதயநிதி அதிலிருந்து எப்படி தப்பிக்கின்றார் என்பதே படத்தின் கதை. இந்த திரைப்படம் இரவில் நடக்கும் கதையாகும். அந்த ஒரு இரவுக்கு முன்னும் பின்னும் நடக்கும் சம்பவங்கள் திரையில் பேசப்படுகின்றது. இந்த படத்தில் கிராபிக் டிசைனராக உதயநிதி நடித்திருக்கின்றார். படத்தின் 80 சதவீத காட்சிகள் இரவில் தான் நடக்கும். இந்த படத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.