கேரளாவில் சென்ற சில மாதங்களுக்கு முன்பாக சினிமா தயாரிப்பாளர்கள், நடிகர்கள் உள்ளிட்டோர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டார்கள். இந்த நிலையில் நேற்று மலையாள சினிமாவுலகில் நடிகராக வலம் வரும் மோகன்லால் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சென்று சோதனை மேற்கொண்டார்கள்.

கொச்சியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாரிகள் மோகன்லாலிடம் விசாரணை செய்தனர். இந்த விசாரணையானது சுமார் 5 மணி நேரம் நடந்தது. விசாரணைக்கு பின் இதுவரை அதிகாரிகள் எவ்வித தகவலும் வெளியிடவில்லை. மோகன்லாலிடம் வருமானவரித் துறை விசாரணை நடத்தியது. இது  கேரளா திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.