தனுஷ் நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் மித்ரன். இவர் தனுஷை வைத்து திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை இயக்கி இருக்கின்றார். இந்த திரைப்படத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரகாஷ் ராஜ், ப்ரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். இத்திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப் ஹிட்டானது. இந்நிலையில தனது அடுத்த திரைப்படம் குறித்த தகவலை மித்ரன் ஜவகர் வெளியிட்டிருக்கின்றார்.

இது குறித்த அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் பெரும் வெற்றிக்கு பிறகு தனது அடுத்த திரைப்படம் திறமையான மற்றும் எனக்கு பிடித்த நடிகர் மாதவனுடன் அமைய உள்ளது. பிரபலமான மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் அந்த திரைப்படத்தை தயாரிப்பதாக தெரிவித்திருக்கின்றார்.