கூடலூர் அருகே லோயர்கேம்ப் நிலையத்தில் மின் உற்பத்தி குறைந்திருக்கின்றது.

தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே இருக்கும் லோயர்கேம்பில் மின்சார உற்பத்தி நிலையம் இருக்கின்றது. இங்கு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் நீர் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. மேலும் இதற்காக நான்கு ஜெனரேட்டர்களும் அமைக்கப்பட்டிருக்கின்றது. முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மலைப்பொழிவு இல்லாததன் காரணமாக அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகின்றது.

சென்ற இரண்டு நாட்களுக்கு முன்பாக முல்லை பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 1033 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் 93 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. 967 கன அடியாக நீர் குறைக்கப்பட்டதால் மின் உற்பத்தி குறைய தொடங்கியது. மேலும் மூன்று ஜெனரேட்டர்களில் தலா 29 மெகாவாட் வீதம் மொத்தம் 87 உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றது குறிப்பிடத்தக்கது.