மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டவருக்கு 10 வருடம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பெண்ணாத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட புதுதெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவர் சென்ற 2018 ஆம் வருடம் ஜனவரி 16ம் தேதி 16 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பிஸ்கட் தந்து ஏமாற்றி வீட்டின் மொட்டை மாடிற்கு அழைத்துச் சென்று பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு இருக்கின்றார். இதை பார்த்த சிறுமியின் தந்தை மணிகண்டனை பிடிக்க முயன்றபோது அவர் தப்பித்து விட்டார்.

இதுபற்றி காவல் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து போக்ஸோ சட்டத்தில் மணிகண்டனை கைது செய்தார்கள். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதற்கு பத்து வருட சிறை தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு வருடம் சிறை தண்டனை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதன்பின் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பாக ஒரு லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.