காஷ்மீரில் பதான் திரைப்படம் வெளியானதிலிருந்து ஹவுஸ்புல் காட்சிகளாக இருக்கிறது.

உச்ச நட்சத்திரமான ஷாருக்கான் ஐந்து வருடங்களுக்குப் பிறகு நடித்துள்ள திரைப்படம் பதான். இத்திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நீண்ட இடைவேளைக்குப் பிறகு தீபிகா படுகோன் நடித்துள்ளார். ஹிந்தியில் வெளியான இத்திரைப்படம் தமிழிலும் டப்பிங் செய்து ரிலீஸ் ஆகி இருக்கின்றது.

இந்த திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக தீபிகா படுகோனின் காவி நிற நீச்சல் உடை சர்ச்சையை ஏற்படுத்தியது. இது படத்திற்கு விளம்பரமாக அமைந்தது. இதனால் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. ஆனால் இத்திரைப்படம் ஒரு தேசபக்தி திரைப்படமாக கொடுத்து அனைவரையும் படக்குழு ஆச்சரியப்பட செய்துள்ளார்கள். இந்தநிலையில் இத்திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் 400 கோடி வசூல் செய்திருக்கின்றது.

சென்ற சில மாதங்களாக காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடந்த நிலையில் தற்போது அங்கு படம் ரிலீஸ் ஆகி உள்ளது. காஷ்மீரில் சென்ற வருடம் செப்டம்பரில் முதல்முறையாக மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் அறிமுகமானது. இதில் சென்ற 25ஆம் தேதி பதான் திரைப்படம் வெளியிடப்பட்டிருக்கின்றது. இது குறித்து ரசிகர் ஒருவர் கூறியுள்ளதாவது, 32 வருடங்களுக்குப் பிறகு காஷ்மீரில் திரைப்படம் வெளியாகி உள்ளது. பொழுது போக்கு விஷயத்திற்கு ஏற்றது. சென்ற நான்கு நாட்களாக பதான் திரைப்படம் அனைத்து ஷோக்களும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருவதாக தெரிவித்திருக்கின்றார்.