சூர்யா-42 திரைப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் நடிகர் சூர்யா தற்போது வாடிவாசல், சிவா உடன் இணைந்து சூர்யா 42 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் சூர்யா 42 படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி ஹீரோயின் ஆக நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த நிலையில் திரைப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இத்திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சிகளில் நடிகை மிருணாள் தாகூர் நடிக்க இருப்பதாக சோசியல் மீடியாவில் செய்தி பரவி வருகின்றது. அதனால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.