கே.வி குப்பத்தில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 148 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி குப்பம் வட்டார அளவிலான வேலைவாய்ப்பு முகாம் தமிழ்நாடு மாநில ஊரக மகளிர் திட்டம் சார்பாக தீன் தயாள் உபாத்தியாய கிராமின் கௌசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் இளைஞர் திறன் திருவிழா நேற்று முன்தினம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடந்தது.

இதற்கு உதவி மகளிர் திட்ட அலுவலர் கலைச்செல்வன் தலைமை தாங்க தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் முன்னிலை வகிக்க ஊரக வாழ்வாதார இயக்க மகளிர் திட்ட இயக்க மேலாளர் வெங்கடேசன் வரவேற்றார். இந்த முகாமில் மொத்தம் 217 பேர் கலந்து கொண்ட நிலையில் 148 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டது.