கிராம சபை கூட்டத்தில் வார்டு உறுப்பினர் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் யூனியனுக்கு உட்பட்ட மேல திருச்செந்தூர் பஞ்சாயத்தில் நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எட்டாவது வார்டு உறுப்பினர் சுதா திடீரென பஞ்சாயத்து தலைவரிடம் தனது வார்டு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் தந்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது, எனது வார்டில் எந்த அடிப்படை வசதியும் செய்து தரவில்லை. பஞ்சாயத்து நிர்வாகம் தொடர்ந்து எனது வார்டு பகுதியை புறக்கணித்து வருவதை கண்டிப்பதாக அவர் தெரிவித்திருக்கின்றார்.

மேலும் கடிதத்தை கொடுத்துவிட்டு உறுப்பினர் கூட்டத்தை விட்டு வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு விளக்கம் தந்து பஞ்சாயத்து தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, எட்டாவது வார்டு நா.முத்தையாபுரம் பகுதி உறுப்பினர் சுதா தன்னுடைய பகுதிக்கு எந்த அடிப்படையில் வசதியும் செய்து தராததால் ராஜினாமா செய்ததாக மனு கொடுத்திருக்கின்றார்.

அந்த பகுதிக்கு இதுவரை 1 கோடியே 52 லட்சத்து 27 ஆயிரத்துக்கு பணிகள் செய்து தரப்பட்டிருக்கின்றது. குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி உள்ளிட்டவை சிறப்பாக இருக்கின்றது. பொதுமக்கள் பிரச்சனையாக இருந்தாலும் மக்களோடு மக்களாக நின்று சரி செய்து கொடுத்துள்ளேன். பொதுமக்கள் பிரச்சனையாக இருப்பினும் மக்களோடு மக்களாக நின்று சரி செய்து கொடுத்திருக்கின்றேன். இந்த நிலையில் சுதா பொய்யான குற்றச்சாட்டை வைத்திருப்பது முற்றிலும் தவறானது என தெரிவித்திருக்கின்றார்.