சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று குடியரசு தின விழாவை முன்னிட்டு முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி பிரியா தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். இந்த விழாவில் மாவட்ட கூடுதல் நீதிபதி சத்திய தாரா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சுதாகர், போக்சோ  நீதிபதி சரத்ராஜ், சார்பு நீதிபதி சுந்தரராஜன், மாவட்ட உரிமையியல் நீதிபதி இனியா கருணாகரன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி பரமேஸ்வரி, வக்கீல்கள் நீதிமன்ற பணியாளர்கள் போன்ற பலர் கலந்து கொண்டனர். அதன் பின் குழந்தைகள் உரிமைகள் எதிர்காலத்தை உறுதியாக்கும் பாதுகாப்பு சட்டம் குறித்து காரைக்குடி அரசு சட்டக் கல்லூரி மற்றும் பிரீஸ்ட் பல்கலைக்கழக சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை அவர் வழங்கியுள்ளார்.