சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று குடியரசு தின விழாவை முன்னிட்டு முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி பிரியா தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். இந்த விழாவில் மாவட்ட கூடுதல் நீதிபதி சத்திய தாரா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சுதாகர், போக்சோ நீதிபதி சரத்ராஜ், சார்பு நீதிபதி சுந்தரராஜன், மாவட்ட உரிமையியல் நீதிபதி இனியா கருணாகரன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி பரமேஸ்வரி, வக்கீல்கள் நீதிமன்ற பணியாளர்கள் போன்ற பலர் கலந்து கொண்டனர். அதன் பின் குழந்தைகள் உரிமைகள் எதிர்காலத்தை உறுதியாக்கும் பாதுகாப்பு சட்டம் குறித்து காரைக்குடி அரசு சட்டக் கல்லூரி மற்றும் பிரீஸ்ட் பல்கலைக்கழக சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை அவர் வழங்கியுள்ளார்.
குடியரசு தின விழா.. பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு…!!!!
Related Posts
சாலையில் தனியாக நின்ற கார்…. உள்ளே கிடந்த 3 சடலங்கள்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி..!!!
தேனி – கம்பம் மெட்டு சாலையில் நேற்று (மே 16) கேரள பதிவு எண் கொண்ட கார் ஒன்று தனியாக நின்றிருந்துள்ளது. அதில் பெண் உள்பட மூன்று பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கேரளா கோட்டயம்…
Read moreகாதல் தோல்வி: விரக்தியில் கம்பியூட்டர் எஞ்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை…. சென்னையில் அதிர்ச்சி…!!!
சென்னை வளசரவாக்கம் பொன்னி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்கண்ணா (25). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த சில தினங்களாக வீட்டில் இருந்து பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் (மே 15) இரவு வீட்டில்…
Read more