மின்சாரம் சார்ந்த புகார்கள் தெரிவிக்க இனி வாட்ஸ் அப்பை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

மின்சாரம் சார்ந்த புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க இனி வாட்ஸ் அப்பை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏற்படும் மின்தடை, மின் விபத்துக்கள், அறுந்து தரையில் கிடக்கும் மின் கம்பிகள், மின் மீட்டர் சார்ந்த புகார்கள், தாழ்வான மின் கம்பிகள் உள்ளிட்ட மின்சாரம் சார்ந்த புகார்களை தெரிவிக்க வேலூர், காட்பாடி, ஆற்காடு, ராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம் உள்ளிட்ட மேற்பார்வை பொறியாளரின் what’s app எண்ணான 6380283535 மூலம் புகார் அளிக்கலாம். கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1912 அல்லது 9498794987 உள்ளிட்ட எண்ணிலும் புகாரை தெரிவிக்கலாம் என வேலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சாந்தி தெரிவித்து இருக்கின்றார்.