இரட்டை குழந்தைகளுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய நயன்தாராவின் குடும்ப புகைப்படம் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கின்றார் நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நயன்தாரா. இதன் பின் வாடகை தாய் மூலம் இத்தம்பதியினருக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை தனது கணவர் மற்றும் இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா மகிழ்ச்சியாக கொண்டாடி இருக்கின்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தற்போது வெளியிட்டு இருக்கின்றார். அந்த பதிவில் குழந்தைகள் உயிர், உலகம் என பதிவிட்டு குழந்தைகள் இருவரின் முகங்களை மட்டும் எமோஜி போட்டு மறைக்கப்பட்டிருக்கின்றது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)