திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொக்கிரகுளம் கீழ வீரராகவபுரத்தை சேர்ந்த முகேஷ் என்பவர் தனியார் நிறுவன ஊழியர். இவரின் மனைவி சுவிதா. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்ற நிலையில் சென்ற நான்கு மாதங்களுக்கு முன்பாக பெண் குழந்தை ஒன்று பிறந்தது. திடீரென நேற்று காலை அந்த பெண் குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். ஆனால் அங்கு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இதை தொடர்ந்து முகேஷ் மற்றும் சுவீதா மற்றும் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் இறந்த குழந்தையின் உடலை எடுத்துக்கொண்டு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றனர். பின் அங்கு குழந்தையின் உடலை வைத்து கதறி கதறி அழுதனர். இதன் பின் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து முறையிட்டார்கள். இதையடுத்து போலீசார் குழந்தை உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

இது பற்றி முகேஷ் கூறியுள்ளதாவது, நான் நெல்லையில் இருக்கும் தனியார் கேஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தேன். அப்போது அந்த நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக என் மீது புகார் கொடுக்கப்பட்டது. இது பற்றி என் மீது மட்டுமல்லாமல் எனது மனைவி, அம்மா, தம்பி உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்தார்கள். எங்கள் மீது பொய்யாக வழக்கு போடப்பட்டது. இதன்பின் அந்த வழக்கு ரத்து செய்யப்பட்டது.

இந்த வழக்கால் என்னுடைய மனைவி வயிற்றில் இருந்த குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு உடல்நல பாதிப்பால் தற்போது குழந்தை உயிரிழந்து விட்டது. இந்த பொய் வழக்கு பதிவு செய்ய காரணமாக இருந்த போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரப்பரப்பு புகாரை முன் வைத்தார்கள். இதன்பின் போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் விசாரணை நடந்து வருகின்றது. இச்சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.