நண்பகல் நேரத்து மயக்கம் படக்குழு பொங்கல் வாழ்த்து தெரிவித்து போஸ்டர் வெளியிட்டுள்ளது.

மலையாள சினிமா உலகில் குறுகிய காலத்தில் முன்னணி இயக்குநராக உயர்ந்தவர் டைரக்டர் லிஜோஜோஸ் பெள்ளிசேரி. இப்போது இவர் மம்முட்டி நடிப்பில் “நண்பகல் நேரத்து மயக்கம்” என்ற படத்தை இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் பொள்ளாச்சியை கதைக் களமாக கொண்டு உருவாகி இருக்கும் இந்த படத்தில் மம்முட்டி ஒரு சாதாரண எளிய கிராமத்து மனிதனாக நடித்து உள்ளார்.

இப்படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்த போஸ்டர்கள் அவ்வப்போது வெளியாகி மிகப் பெரிய ஆச்சரியத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தியது. தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய 2 மொழிகளில் இப்படம் ஒரே நேரத்தில் உருவாகி இருக்கிறது. இத்திரைப்படம் வருகிற ஜனவரி 19ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படக்குழு பொங்கல் வாழ்த்து கூறி தமிழிலும் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். அந்த போஸ்டரை நடிகர் மம்முட்டியும் ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் பகிர்ந்திருக்கின்றார்கள். இந்த கதை தமிழகத்தில் நடந்ததை கொண்டு உருவாக்கப்பட்டு இருப்பதால் சரியான விதத்தில் ப்ரோமோஷன் செய்தால் வரவேற்பு பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது