தில் ராஜு கூறிய கருத்தால் தெலுங்கு திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது முதல் முதலாக தெலுங்கில் நடித்த திரைப்படம் வாரிசு. இந்த திரைப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பாக வாரிசு திரைப்படத்திற்கு அதிக தியேட்டர் ஒதுக்குவதில் இவர் தெரிவித்த கருத்தும் விஜய் தான் நம்பர் ஒன் ஹீரோ என கூறியதும் தமிழ் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் இவர் அண்மையில் நடைபெற்ற வாரிசு இசை வெளியீட்டு விழாவில் இதுவரை நான் தெலுங்கில் பல நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கின்றேன். எனக்கு ஒரு காபி கொடுத்தது கிடையாது. ஆனால் விஜய்யை சந்திக்க சென்றபோது அவர் தனது கைகளில் இரண்டு காபி கோப்பைகளுடன் வந்து அதில் எனக்கு ஒரு கப் காபி கொடுத்து உபசரித்தார். இதனால் தான் அவர் சினிமாவை தாண்டியும் சூப்பர்ஸ்டாராக இருக்கின்றார் என பாராட்டினார். இவர் விஜயை உயர்த்தி பேசுவதாக நினைத்து ஒரு பெரிய விழாவில் தெலுங்கு நடிகர்களை குறை சொல்லியது தெலுங்கு திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.