தமிழகத்தின் ஜாதி வேறுபாடு இன்றி அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் நோக்கத்தில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் பயிற்சி பெற பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் தமிழக அறநிலையத்துறை ஓராண்டு சான்றிதழ் பயிற்சி வகுப்புகளை இலவசமாக நடத்துகிறது.

இதில் 14 முதல் 24 வயது கொண்டவர்கள், எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதும்., உணவு, தங்குமிடத்துடன் மாதம் 3000 ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. உடனே கட்டணமில்லா எண்: 1800 425 1757 ஐ அழையுங்கள் அல்லது HRCE என்ற லிங்க்-ஐ க்ளிக் பண்ணுங்க.