இந்தியாவில் ஆதார் விவரங்கள் குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சர்வர்களில் இருந்து 81 கோடி பேரின் தரவுகள் டார்க் வெப்பில் கசிந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா பரிசோதனையின் போது அளித்த பெயர், தொலைபேசி எண் மற்றும் முகவரியுடன் கூடிய ஆதார உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கசிந்துள்ளது. ஐ சி எம் ஆர் புகார் அளித்த நிலையில் இந்தியாவின் முதன்மையான மத்திய புலனாய்வு அமைப்பு இந்த விஷயத்தை விசாரிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.