இந்தியாவில் சமீபகாலமாக ரயில் விபத்துகள் தொடர்கதையாகி வருகின்றனர். கடந்த ஜுன் மாதம் ஒடிசா ரயில் விபத்தில் 296 பேர் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் ஆந்திராவில் நடந்த ரயில் விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். இது போன்ற சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக பல தொழில்நுட்ப வழிகளை ஆராய்ந்து செயல்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.

இந்த சூழலில், ஸ்டேஷன் மாஸ்டர் அறை, சிக்னல் கட்டுப்பாட்டு அறைகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது, புதியதாக 5 ஆயிரம் ரயில் இன்ஜின்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.