டெல்லியில் அதிக அளவில் ஏற்படும் காற்று மாசை தடுப்பதற்காக BS 6 வகை டீசல் என்ஜின்களை கொண்ட மின்சாரம் அல்லாத பேருந்துகள் நுழைவதற்கு டெல்லி போக்குவரத்து துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையை நவம்பர் 1ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு அனைத்து தனியார் மற்றும் மாநில பொதுத்துறை பேருந்துகளுக்கும் பொருந்தும்.

இந்த அறிவிப்பை மீறி டீசல் பேருந்துகள் மாநிலத்திற்குள் நுழைந்தால் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அது மட்டுமல்லாமல் அனைத்து பேருந்து நிலையங்கள் மற்றும் தனியார் பேருந்து நிறுத்தும் இடங்களில் சோதனை நடத்தப்பட்டு விதிமுறைகள் மீறும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.