ஆதார் விவரங்கள் குறித்து மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சர்வர்களில் இருந்து 81 கோடி பேரின் தரவுகள் டார்க் வெப்பில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரிசோதனையின்போது அளித்த பெயர், தொலைப்பேசி எண், முகவரியுடன் கூடிய ஆதார் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கசிந்துள்ளன. ஐசிஎம்ஆர் புகார் அளித்த நிலையில், இந்தியாவின் முதன்மையான மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இந்த விஷயத்தை விசாரிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.