பிரிட்டனில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அத்துமீறி செயல்பட்ட எட்டு நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் மக்கள் இன்று உற்சாகமாக புத்தாண்டை வரவேற்றிருக்கிறார்கள். நள்ளிரவு 12 மணியிலிருந்தே கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. மக்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் உற்சாகமாக புத்தாண்டை கொண்டாடினார்கள். அதன்படி, லண்டனில்  வானவேடிக்கைகளோடு புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோலாலமாக நடைபெற்றது.

https://twitter.com/MetPoliceEvents/status/1609381529842597889

எனினும், நேற்று மாலையிலேயே தொடங்கப்பட்ட புத்தாண்டு கொண்டாட்டங்களில் மது போதையில் தாக்குதல் மேற்கொண்டது, ஒழுங்கற்று செயல்பட்டது, ஆயுதம் வைத்திருந்தது, காவல்துறையினரை தாக்கியது உட்பட பல குற்றங்களில் ஈடுபட்ட எட்டு நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.