கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில், 8 ஆம் வகுப்பு சிறுமி மார்ச் 30 அன்றுவீட்டு  குளியலறையில் தலையில் காயம் மற்றும் மூக்கில் இருந்து இரத்தம் வெளியேறி இறந்து கிடந்தார். பின்னர் சிறுமியின் மரணம் குறித்த பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அச்சிறுமியின் மூளையில் உள் இரத்தப்போக்கு ஏற்பட்டது தான் அவரது மரணத்திற்குக் காரணம் என்றும் தெரியவந்துள்ளது.

அந்த சிறுமி இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபட வற்புறுத்தப்பட்டதாகவும், இதன் காரணமாகவே அவரது உடலில் ஆழமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.