கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 8 மாத குழந்தை உட்பட 3 பேர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நரிமேடு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், அவரது வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்ற போது, வளர்மதி மற்றும் அவரது 11 வயது மகன் தமிழரசன் மற்றும் 8 மாத கைக்குழந்தை கேசவன் ஆகியோர்‌ கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.