தமிழ்நாட்டிற்கு 71 உணவு பதப்படுத்துதல் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு சம்பதா திட்டத்தின் கீழ் 71 உணவு பதப்படுத்துதல் திட்டத்திற்கு  அனுமதி வழங்கி உள்ளதாக மத்திய உணவு தொழில் துறை இணை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் மாநிலங்களுக்கான திட்டங்கள் குறித்து பேசிய இணை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் ஒரு மெகா உணவு பூங்கா உள்ளிட்ட 71 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றார். ‌ மேலும் இதற்காக 2022-23 ஆம் நிதியாண்டில் ரூ. 155.14 கொடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.