7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய கள்ளக்காதலனுக்கு உடந்தையாக இருந்த தாய்க்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. கேரளாவின் திருவனந்தபுரம் விரைவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆர்.ரேகா, சம்பந்தப்பட்ட சிறுமியின் தாய்க்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.20,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட பெண் தனது கணவரை விட்டுவிட்டு 2018-19-க்கு இடையில் தனது காதலலான சிசுபாலனுடன் சேர்ந்து வாழ்ந்தார். அப்போது சிறுமியை சிசுபாலன் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்தரங்க உறுப்புகளில் காயமடைந்த சிறுமி, தனது தாயிடம் கூறிய போதிலும், அதை யாரிடமும் சொல்லக்கூடாது என தாய் மிரட்டி வந்துள்ளார்.