உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்தவர் அசோக் யாதவ். இவரது மகனுக்கு சேகர் யாதவ் என்பவரது மகளை திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் அசோக் மகன் மற்றும் சேகர் மகள் என கணவன் மனைவி இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சேகர் யாதவ் அசோக் யாதவ் மீது கோபத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று இருந்தபோது அசோக் யாதவை சேகர் யாதவ் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அசோக் யாதவ் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் 5 தனி படைகள் அமைத்து சேகர் யாதவை தேடி வருகின்றனர்.