தெலுங்கானா மாநிலத்தில் வருகின்ற நவம்பர் 30ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இந்த நாளில் வாக்களிக்க வாக்குப்பதிவு மையங்களுக்கு செல்லும் பொது மக்களுக்கு இலவசமாக பைக் சேவை வழங்க உள்ளதாக ரேபிடோ நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கவும் பொது மக்களின் சிரமத்தை குறைக்கும் விதமாக ஹைதராபாத்தில் உள்ள மையங்களுக்கு இந்த சேவையை வழங்க உள்ளதாக ரேபிடோ இணை இயக்குனர் பவன் குண்டுபலி தெரிவித்துள்ளார்.