வங்காளத்தின் அலிபுர்துவார் மாவட்டத்தில் உள்ள ராஜபத்காவா ஷிகாரி ரயில்வே கேட் அருகே திங்கள்கிழமை காலை ஒரு பெண் யானையும் இரண்டு குட்டி யானைகளும் ரயில் தண்டவாளத்தை கடக்க முயற்சித்துள்ளன

அப்போது கவுகாத்தியில் இருந்து சிலிகுரிக்கு செல்லும் முறையில் இந்த யானைகள் மீது மோதியது. இதில் பெண் யானையும் ஒரு குட்டியும் 15-20 அடி தூரத்தில் தூக்கி வீசப்பட்டன. மற்றொரு குட்டி ரயில் தண்டவாளத்திலேயே நசுங்கி உயிரிழந்தது.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், “ரயிலின் வேகம் அதிகமாக இருந்தது தான் இந்த கொடூர சம்பவத்திற்கு காரணம். இந்த விஷயத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளனர்.