அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறயுள்ளது. ஏற்கனவே 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஆசையில் பாஜக, ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் காங்கிரஸ் போட்டிப்போட்டு கொண்டு கூட்டணியை அமைத்து வருகின்றனர். இந்தநிலையில், நாட்டின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என்ற கருத்துக் கணிப்பு தமிழகத்தில் தந்தி டிவி நடத்தியது. \

கருத்துக் கணிப்பின் முடிவுகளின்படி 70 சதவீதம் பேர் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்றும், 25 சதவீதம் பேர் நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளனர். 5 சதவீதம் பேர் மற்றவர்களுக்கு வாக்களித்திருக்கின்றனர். இந்த கருத்துக்கணிப்பு அரசியலில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.