மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகல விலைப்படி உயர்வு வழங்கப்படும் நிலையில் சமீபத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஐந்தாவது மற்றும் ஆறாவது ஊதிய குழு அடிப்படையில் சம்பளம் பெற்று வரும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஐந்தாவது ஊதியக்குழு அடிப்படையில் சம்பளம் பெரும் ஊழியர்கள் அனைவருக்கும் 477 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆறாவது ஊதிய குழு அடிப்படையில் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு 221 சதவீதத்தில் இருந்து 230 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான இந்த புதிய அகலவிலைப்படி உயர்வு 2023 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.