இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புவதால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஒரே ஒரு ரயில் டிக்கெட் மூலமாக நாடு முழுவதும் 56 நாட்களுக்கு சுற்றுலா மேற்கொள்ளும் விதமாக ஒரு சூப்பர் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த பயண டிக்கெட்டை எடுத்துக் கொள்வதன் மூலமாக எந்த ரயிலிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் 56 நாட்களுக்கு பயணிகள் பயணம் செய்ய முடியும்.

அதனைப் போலவே தாங்கள் விரும்பும் எந்த வகுப்பில் வேண்டுமானாலும் பயணிக்க முடியும் என்றும் இதற்கான கட்டடம் மிகவும் சாதாரண அளவில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டை ரயில் கவுண்டரில் பெற்றுக் கொள்ள முடியாது. இதற்காக முக்கிய ரயில் நிலையங்களில் உள்ள பிரிவு வணிக மேலாளர் அல்லது நிலைய மேலாளர் அலுவலகத்தில் டிக்கெட் கோரிக்கை செலுத்தி சுற்றுலா பயணத்திற்கு டிக்கெட்டை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.