நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் அரசு மருத்துவமனைகளில் அனைத்து விதமான மருத்துவ வசதிகளையும் தயாராக வைத்திருக்க வேண்டும் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

சீனாவில் தற்போது H9N2 பறவை காய்ச்சல் மற்றும் குழந்தைகளை பாதிக்கும் நிமோனியா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் நோய் தொற்றை தீவிரமாக கண்காணித்து தெரியப்படுத்தவும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.